பாரதிய ஜனதா, நன்றி மறந்துவிட்டு, முதுகில் குத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது - தக்க பதிலடி கொடுக்கப்படும் என சிவசேனா எச்சரிக்கை
Nov 19 2019 9:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரதிய ஜனதா, நன்றி மறந்துவிட்டு, முதுகில் குத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிவசேனா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
பாரதிய ஜனதாவுடன் கடும் மோதல் ஏற்பட்டதை அடுத்து, மஹாராஷ்ட்ராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. இதனிடையே, சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான Saamana, இன்று எழுதியுள்ள தலையங்கத்தில், பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்குவதில் சிவசேனா மிகப்பெரும் பங்காற்றியதாகவும்,
சிவசேனாவிடமிருந்து, பல சந்தர்ப்பங்களில் ஆதரவையும் உதவியையும் பெற்ற பாரதிய ஜனதா, நன்றி மறந்துவிட்டு, முதுகில் குத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக, பாரதிய ஜனதாவை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்போவதாகவும் சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.