மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் : பேத்தியான பிரியங்கா காந்தி ஆங்கில கவிதை அர்ப்பணிப்பு
Nov 19 2019 9:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது பேத்தியான பிரியங்கா காந்தி, ஆங்கில கவிதை ஒன்றை அர்ப்பணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கவிஞர் எர்னெஸ்ட் ஹென்லே எழுதிய கவிதையை, நான் அறிந்த மிக தைரியமான பெண்மணிக்கு அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டுள்ளார். "நான் வீழ்ச்சியடைந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் அழுததில்லை; பயங்கரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டு தலை முழுவதும் ரத்தமாகியிருந்த சூழலிலும் நான் தலை குனியவில்லை; இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த அச்சுறுத்தல் தொடர்ந்தாலும், என்னை பயமுறுத்துவதற்கான காரணத்தை கண்டறிய முடியாது என்ற கவிதையை பதிவிட்டிருப்பதோடு, இந்திராகாந்தியுடன் தான் சிறுவயதில் விளையாடிய புகைப்படம் ஒன்றையும், பதிவிட்டுள்ளார்.