டெல்லியில் "காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு" கூட்டம் - நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆலோசனை
Nov 19 2019 6:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
"காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு" கூட்டம், அதன் தலைவர் நாவீன் குமார் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திரு.ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் திரு. சுப்பிரமணியம், உறுப்பினர் திரு. பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் திரு.கண்ணன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலத்தின் பிரதிநிதிகள், காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பிக்கப்பட்டது. தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நதிநீர் அளவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.