தெலங்கானாவில் ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் முத்தலாக் கொடுத்த கணவன் மீது மனைவி புகார்
Nov 19 2019 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆண் குழந்தை பெற்றெடுக்காத மனைவிக்கு முத்தலாக் கொடுத்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன் மீது அவரது மனைவி புகாரித்துள்ளார்.
தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் வசித்து வருபவர் மெஹ்ராஜ் பேகம். இவருக்கு திருமணம் முடிந்த நிலையில், ஆண் குழந்தை பெற்று கொடுக்கவில்லை என கூறி மெஹ்ராஜை அவரது கணவன் முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்து உள்ளார். இதுபற்றி போலீசில் மெஹ்ராஜ் அளித்துள்ள புகாரில், ஆண் குழந்தை பிறக்காததற்காக தனக்கு முத்தலாக் கொடுத்து விட்டு தனது கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். முத்தலாக் தடைச்சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.