நாடாளுமன்ற காவலர்களுக்கு சீருடை மாற்றம், கல்விக் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அமளி - 2 மணி வரை ஒத்திவைப்பு
Nov 19 2019 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவலர் சீருடை மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றுபிரச்சனை எழுப்பினர்.
மாநிலங்களவை இன்று தொடங்கியதும் நாடாளுமன்ற காவலர்களின் சீருடை மாற்றம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கட்டண உயர்வு தொடர்பாக விவாதிக்க எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாவலர் உடை மாற்றம் குறித்து பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்வதாக திரு. வெங்கைய நாயுடு முன்னதாக அவையில் தெரிவித்தார்.