இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைகோளை ஏந்திச் செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் - வரும் 25-ம் தேதி ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தகவல்
Nov 19 2019 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் தயாரக்கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வரும் 25-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கார்டோசாட்-3 செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோளுடன் 13 வணிக நானோ வகை செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும் 74-வது ராக்கெட், இந்த விண்கலத்தை ஏந்திச் செல்கிறது. கார்டோசாட்-3 செயற்கைகோள், பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வு பணிக்காக மேம்படுத்த உதவும் என்றும், 13 நானோ வகை செயற்கைகோள்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவையாகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் கவுண்ட்டவுன் வரும் 23-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.