ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Nov 19 2019 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், 'ஜாமின்' கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரவுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, இன்று அல்லது நாளை விசாரிப்பதாக உத்தரவிட்டார்.