மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் 102-ஆவது பிறந்தநாள் - டெல்லியில் உள்ள நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
Nov 19 2019 11:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திராகாந்தியின் நினைவிடத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.