சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி : பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
Nov 19 2019 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
உலகின் உயரமான போர்க்களமாகத் திகழும் சியாச்சின் பகுதி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பனி படர்ந்த இந்த மலைப்பகுதி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.
சியாச்சின் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 8 வீரர்கள் வரை சிக்கியிருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்கள் மீட்புக்குழுக்கள் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.