நாடாளுமன்றக் கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் - பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு
Nov 17 2019 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் திரு.மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், நாளை தொடங்கி டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம், மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், இ - சிகரெட் தடைச் சட்டம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்றும் டெல்லி நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி கூட்டியிருக்கும் இந்த கூட்டத்தில், பிரதமர் திரு. மோடி, உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா உள்ளிட்டோரும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.