ஜனநாயகம், தேர்தல் மேலாண்மை தொடர்பான சர்வதேச கல்வி நிலையத்தில் டி.என்.சேஷன் நினைவாக "தனி இருக்கை" : நேர்மை, தூய்மையை உறுதிப்படுத்த அரும்பணி ஆற்றியதாக புகழாரம்
Nov 17 2019 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நினைவாக, இந்திய தேர்தல் ஆணையம் நிர்வகித்து வரும் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை தொடர்பான சர்வதேச கல்வி நிலையத்தில், தனி இருக்கை ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் கடந்த வாரம் காலமானார். இவர், இந்திய தேர்தல் நடைமுறைகளில், பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர். மேலும், இவர் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த போது தான், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
டி.என்.சேஷனை கவுரவிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் நிர்வகித்து வரும் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை தொடர்பான சர்வதேச கல்வி நிலையத்தில், தனி இருக்கை ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு காலத்திற்கான இந்த இருக்கைக்கு, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி தலைமை வகிக்க உள்ளார். இந்திய தேர்தல் களத்தில் வெளிப்படைத்தன்மை, நேர்மை, தூய்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த டி.என்.சேஷன் அரும்பணி ஆற்றியதாக தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா குறிப்பிட்டார்.