இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி : நிறுவனம் கடும் நட்டத்தை சந்தித்ததால் முடிவு என தகவல்
Nov 17 2019 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பதவியை, திரு. அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.
கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ள, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பை, திரு. அனில் அம்பானி ராஜினாமா செய்தார். இவருடன், சாயா விராணி, ரைனா கரானி, மஞ்சாரி காக்கர், சுரேஷ் ரங்காச்சார் ஆகியோரும், இயக்குனர் பொறுப்பை ராஜினாமா செய்தனர்.
கடன் சுமையில் சிக்கியுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஒட்டுமொத்த அளவில், 30 ஆயிரத்து 142 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆயிரத்து 141 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. ஏற்கனவே, கடன் சுமையில் இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு, இது மிகப்பெரிய பின்னடைவாகும்.
இதன் காரணமாகவே, திரு. அனில் அம்பானி உட்பட 5 இயக்குனர்களும் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குனர் பொறுப்புகளை, திரு. மணிகண்டன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.