மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-என்.சி.பி. சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு - சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி உறுதி
Nov 15 2019 1:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து, சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு வழங்க, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அம்மாநிலத்தில், புதிய ஆட்சி அமைப்பது குறித்து, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியுடன், திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு அளிக்கவும், தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளது. 16 , 14 , 12 என்ற விகித அடிப்படையில், அமைச்சரவை குறித்தும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நாளை மதியம் 3 மணிக்கு, ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.