பிரசிலில், பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு - எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களை இந்தியாவுக்‍கு விற்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்

Nov 15 2019 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசிலில், பிரதமர் நரேந்திர மோடியுடன், ரஷ்யாவின் எஸ். 400 ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களை விற்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான, பிரசிலில், அண்மையில், பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் நரேந்‌‌திர மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியுடன், ரஷ்யாவின் எஸ். 400 ஏவுகணைத் தடுப்பு ஆயுதங்களை விற்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றதாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி அனைத்து நடவடிக்கைகளும் சுமுகமான முறையில் நடைபெற்று வருவதாகவும், இந்தியாவுடன் தொழில்நுட்பம் மிகுந்த ஆயுத விற்பனையில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.

கடந்த ஆண்டு ரஷ்யாவிடமிருந்து, எஸ். 400 ஏவுகணைத் தடுப்புகளை வாங்க இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00