டெல்லியைத் தொடர்ந்து ஹரியானாவிலும் அதிகரித்து வரும் காற்று மாசு - குருகிராம் நகரம் முற்றிலுமாக மாசுபட்டதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
Nov 15 2019 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காற்று மாசுபாட்டின் பாதிப்பில் இருந்து டெல்லி மக்கள் இன்னமும் மீளாமல் இருக்கும் சூழலில் அண்டை மாநிலமான ஹரியானாவிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. உடற்பயிற்சி செய்பவர்களும் காலை நேரத்தில் பணிக்கு செல்பவர்களும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். முகத்தில் பாதுகாப்பு கவசம் அணிந்தபடி நாட்களை ஓட்ட வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இந்த புகை மண்டலம் காரணமாக வாகன ஓட்டிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியானாவின் குருகிராம் நகரம் முற்றிலுமாக மாசுபட்டதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.