பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலே இல்லை - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திட்டவட்டம்
Nov 15 2019 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல், தற்போது இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாமலும், வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாமலும், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என்றும், பயங்கரவாதம் தான் உண்மையான பிரச்சினை என்பதை பாகிஸ்தான் ஏற்க மறுப்பதாகவும், அமைச்சர் திரு. ஜெய்சங்கர் கூறினார்.