உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா? - நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்
Nov 12 2019 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் வரும் 17ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அவர் பணி ஓய்வு பெறுவதற்கு முன், அயோத்தி வழக்கு, ரஃபேல் வழக்கு, சபரிமலை வழக்கு, ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் வருமா? ஆகிய 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருமா என்பது குறித்து, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
அரசாங்க உயரதிகாரிகளை கேள்வி கேட்கும் நம்பிக்கையையும், உரிமையையும் பொதுமக்களுக்கு அளிக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.