பீகாரில் மத்திய அமைச்சர் மீது மை வீசிய மர்மநபர்கள் - ஜனநாயகத்தின் மீது மை வீசப்பட்டதாக அமைச்சர் வேதனை
Oct 15 2019 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலத்தில், மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே மீது மர்ம நபர்கள் மையை வீசி அவமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.அஸ்வினி சவுபே நேரில் பார்வையிட்டார். நோயாளிகளை பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்ட அஸ்வினி சவுபே மீது, மர்மநபர்கள் சிலர் பேனா மையை வீசி விட்டு தப்பியோடினர். இதனால், பதற்றமடைந்த அமைச்சர், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயகத்தின் தூண் மீதும் மை வீசப்பட்டதாக தெரிவித்தார்.