ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
Oct 15 2019 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, முறைகேடாக 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சி.பி.ஐ. காவல் நிறைவடைந்த நிலையில், அவரை நீதிமன்ற காவலில், திஹார் சிறையில் அடைக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 5-ம் தேதி உத்தரவிட்டது. நீதிமன்றக்காவல், வரும் 17-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, சி.பி.ஐ. தரப்பில் இன்று காலை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.