தேவைகள் குறைந்து வருவதுதான் இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலைக்கு காரணம் - நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார மேதை அபிஜித் பானர்ஜி கருத்து
Oct 15 2019 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய மக்களின் தேவைகளை அதிகரித்து, அவற்றை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டால்தான் பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய முடியும் என பொருளாதார நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்காண பொருளாதார நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அபிஜித் பானர்ஜி, இந்திய பொருளாதாரம் மோசமாக சென்று கொண்டிருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக பணியாற்றுவதை விட, தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியம் என கூறியுள்ளார். பிரச்னையை உணரும் வேகத்தை விட, பொருளாதார மந்தநிலை வேகமாக மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேவையை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், பொருளாதார வல்லுநர் திரு. அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.