மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எவ்வாறு? என குஜராத் பள்ளி தேர்வில் சர்ச்சை கேள்வி - விசாரணை மேற்கொள்ளப்படுமென அதிகாரிகள் தகவல்
Oct 14 2019 6:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட தேர்வில் மகாத்மாகாந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று உள்மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது. அப்போது 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? எனக் கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வியை படித்து பார்த்ததும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து செய்தி அறிந்ததும், கேள்வித்தாளை தயாரித்த பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த கேள்வி முற்றிலும் ஆட்சேபனைக்குரியது என்றும், முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.