சமூக வலைதள கணக்குடன் ஆதாரை இணைக்கும் விவகாரம் : வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Oct 14 2019 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சமூக வலைதளங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளை தவிர்க்க, சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. இந்த வழக்குகளை ஒன்றாக இணைத்து, உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அதனை கட்டுப்படுத்த சமூக வலைதள கணக்குடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரி, அஸ்வினி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க தேவையில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.