தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அதிகரிப்பு : மோசமான காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பாதிப்பு
Oct 14 2019 2:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக இன்று அதிகாலை புகைமண்டலம் சூழ்ந்தது போல் காணப்பட்டது. அங்கு மீண்டும் காற்றுமாசு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை சில இடங்களில் புகை மண்டலம் போன்று சூழ்ந்து காணப்பட்டது. பல இடங்களில் காற்று மாசின் அளவு 235-ஐ கடந்தது. குறிப்பாக லோதி சாலை பகுதியில் காற்று மாசு குறியீடான பி.எம். 2 புள்ளி 5-ல் இருந்து பி.எம் 10 வரை காணப்பட்டது. இது மோசமான காற்று மாசின் அளவாகும். இதேபோன்று நேற்றையதினம் ஆனந்த் விஹார் பகுதியில் மிகவும் மோசமாக காற்று மாசின் அளவு 325-ஐ கடந்தது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.