நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மிகவும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் வேதனை
Oct 14 2019 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள Brown பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. ரகுராம் ராஜன் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மிகவும் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியின் மீது அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பார்வை நிச்சயமற்ற தண்மையுடன் இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளும் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளதாகவும், ஆகஸ்டு மாதத்தின் தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.