கர்நாடகாவில் இரண்டு பேரை அடித்துக் கொன்று அச்சுறுத்தி வந்த புலி - வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்ததால் மக்கள் நிம்மதி
Oct 14 2019 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் இரண்டு பேரை அடித்துக் கொன்ற புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கர்நாடகா மாநிலம், பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று, உணவுதேடி கிராமத்துக்குள் புகுந்து கடந்த சில மாதங்களாக அட்டகாசம் செய்து வந்தது. கடந்த மாதம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 2 பேரை இப்புலி அடித்துக் கொன்றது. தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் அந்த புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், குண்டலுபேட்டை என்ற பகுதியில் நடமாடிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். புலி பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.