ரஃபேல் முறைகேடு - பாஜக தலைவர்களுக்கு குற்ற உணர்ச்சி : பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் சென்றது ஏன்? ராகுல்காந்தி குற்றச்சாட்டு
Oct 14 2019 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, பாஜக தலைவர்கள் மனதில் குற்ற உணர்ச்சி உள்ளதாகவும், அதனால்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஃபேல் விமானத்தைப் பெற பிரான்சுக்கு சென்றதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மகாராஷ்ட்ராவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.ராகுல் காந்தி இருவரும் நேற்று ஒரேநேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மும்பையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது, பேசிய அவர், மீண்டும் ரஃபேல் விவகாரத்தை கையிலெடுத்து பாஜகவை தாக்கிப் பேசினார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக, பாஜக தலைவர்கள் மனதில் குற்ற உணர்ச்சி இருப்பதாகவும், அதன் காரணமாகவே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல் ரஃபேல் விமானத்தைப் பெற பிரான்ஸ் நாட்டுக்கு சென்றதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். பாஜகவினரை ரஃபேல் ஒப்பந்தம் இன்னும் உறுத்திக் கொண்டே இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.