ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு : அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஆஜர்
Oct 14 2019 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், ப.சிதம்பரம் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நிறைவடைந்ததையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 5-ம் தேதி, ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல், வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், ப.சிதம்பரத்தை இன்று நேரில் ஆஜர்படுத்த, டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.