ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு : அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஆஜர்

Oct 14 2019 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.என்.எக்‍ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்‍கத்துறை தொடர்ந்துள்ள வழக்‍கில், ப.சிதம்பரம் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் நிறைவடைந்ததையடுத்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 5-ம் தேதி, ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல், வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்‍கப்பட்டது.

இந்த நிலையில், ஐ.என்.எக்‍ஸ். மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்‍கத்துறை தொடர்ந்துள்ள வழக்‍கில், ப.சிதம்பரத்தை இன்று நேரில் ஆஜர்படுத்த, டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00