ரசாயன தொழிலில் வெளிநாடுகளினால் ஏற்படும் ஏற்றுமதி பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் : தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சு
Sep 18 2019 9:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான மத்திய அரசின் விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ்கோயல், மத்திய சிறு,குறு,நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் திரு.பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். தமிழகத்தை சேர்ந்த வி.வி.மினரல் மற்றும் டிரான்ஸ்வேர்ல்டு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் திரு.வி.சுப்பிரமணியன் மற்றும் திரு.வி.வேல்முருகன் உள்ளிடோர் அமைச்சர்களிடம் இருந்து விருதுகளை பெற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் திரு. பியூஷ்கோயல், ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.