பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற பிரதமர் ஒப்புதல் அளித்ததாக மம்தா பேட்டி

Sep 18 2019 7:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, பிரதமர் திரு.நரேந்திர மோடியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கங்களை திறந்து வைப்பதற்காக, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மம்தா பானர்ஜி, மேற்குவங்க மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்றுவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார். மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும், மேற்குவங்கத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்தும் பேசியதாக தெரிவித்தார். நாளை மீண்டும் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க விரும்புவதாகவும் மம்தா தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00