கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் மனைவியுடன் மம்தா திடீர் சந்திப்பு - நினைவு பரிசாக சேலையை வழங்கினார் மம்தா
Sep 18 2019 6:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி செல்ல, கொல்கத்தா விமான நிலையத்திற்கு நேற்றுவந்த மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா, விமான நிலையத்தில் பிரதமர் திரு. மோடியின் மனைவி யசோதா பென் இருப்பதை கண்டதும் அவரை நேரில் சென்று சந்தித்தார்.
கொல்கத்தாவில் 2 நாள் பயணம் செய்த பிரதமர் திரு. மோடியின் மனைவி யசோதா பென், பயணத்தை முடித்து கொண்டு ஜார்க்கண்ட் மாநிலம் செல்ல கொல்கத்தா விமான நிலையத்துக்கு நேற்று வந்திருந்தார். அப்போது, டெல்லி செல்வதற்காக, மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தாவும், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்தார். அப்போது யசோதா பென்னை கண்ட மம்தா, அவரை நேரில் சென்று சந்தித்துப் பேசினார். யசோதா பென்னுக்கு நினைவு பரிசாக தன்னிடம் இருந்த சேலையை மம்தா பானர்ஜி அளித்தார்.