வீர் சவர்கர் உயிரோடு இருந்திருந்தால் பாகிஸ்தானே இருந்திருக்காது - சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து
Sep 18 2019 7:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிந்துத்துவ முன்னோடி வீர் சவர்கர் உயிரோடு இருந்திருந்தால், பாகிஸ்தான் என்று ஒரு நாடே இருந்திருக்காது என்று சிவசேனா கட்சி தலைவர் திரு. உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும், அரசியல்வாதியும், ஹிந்துத்துவ முன்னோடி, வீர் சவர்கர் பற்றி, எழுத்தாளர் திரு. எம்.சம்பத் என்பவர், புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இதன் வெளியீட்டு விழா, மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் நடைபெற்றது. இதில், சிவசேனா கட்சி தலைவர் திரு. உத்தவ் தாக்கரே பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில், வீர் சவர்கர் உயிரோடு இருந்திருந்தால், பாகிஸ்தான் என்று ஒரு நாடே இருந்திக்காது என்றும், அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
நேரு, காந்தி செய்த பணிகளை மறுக்கவில்லை என்றுக் கூறிய அவர், இவர்கள் செய்ததை விட வீர் சவர்கர் நாட்டுக்கு நிறைய செய்தார் என்றும், இந்த புத்தகத்தின் ஒரு பிரதியை காங்கிரஸ் எம்.பி., திரு.ராகுல் காந்திக்கு அளிக்க வேண்டும் என்றும், சிவசேனா எம்.பி. - எம்.எல்.ஏ.,க்களும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்றும் கூறினார்.