அமெரிக்கா செல்லும்போது பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த பிரதமர் மோடிக்கு அனுமதி மறுப்பு - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு
Sep 18 2019 7:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் திரு.மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வழியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 22ம் தேதி டெக்சாஸ் மாகாணம் Huston-ல் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பிரதமர் உரை நிகழ்த்துகிறார். 23-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் தலைமையில் நடைபெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டிலும் பங்கேற்கிறார். 24ம் தேதி பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர், 27-ம் தேதி காலை ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றுகிறார்.
அமெரிக்க பயணத்திற்காக வரும் 21-ம் தேதி, டெல்லியிலிருந்து புறப்படும் திரு. மோடியின் விமானம், பாகிஸ்தான் வான் வழியே செல்ல பாகிஸ்தானிடம் இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கோரியது. இந்த நிலையில், பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி இல்லை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.