இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக் சிகரெட் 77 சதவீதம் அதிகரித்துள்ளதால் நடவடிக்கை
Sep 18 2019 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பதால், இ-சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும், இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார். இ-சிகரெட் உற்பத்தி, விநியோகம், கொள்முதல், விற்பனை ஆகிய அனைத்தும் தடை செய்யப்படுவதாக கூறினார்.
இளைஞர்களிடையே, இ-சிகரெட் பயன்பாடு 77 சதவீதம் அதிகரித்ததாக வேதனை தெரிவித்த அவர், இ-சிகரெட்டில் உள்ள 400 வகையான பிராண்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அவசர சட்டம் இயற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக திருமதி. நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.