இந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்க திட்டம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
Sep 18 2019 7:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் எல்லைகள் உருவான வரலாற்றை புத்தகமாக தொகுக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்அளித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த புத்தகம் தொகுத்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லைகள் வரையறுக்கப்பட்டது தொடர்பான வரலாற்றை புத்தகமாக தொகுக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புத்தகத்தில் இந்தியாவின் எல்லைகள் வரையறுக்கப்பட்டது, திருத்தி அமைக்கப்பட்டது, எல்லைகளுக்குள் கொண்டுவரப்பட்ட மக்கள் அவர்களின் இனம், கலாச்சாரம், சமூக பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த புத்தகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், நேரு நினைவக அருங்காட்சியகம் மற்றும் நூலகம், அகழ்வாராய்ச்சி துறையின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருடன் அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் நேற்று ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த புத்தகம் தொகுக்கப்படும் என்றும் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.