ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் - 11 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனடைவர் என மத்திய அரசு தகவல்
Sep 18 2019 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த, மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், கடந்த 6 ஆண்டுகளாக, 11 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனசாக பாஜக அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார். அதேபோல் இந்த ஆண்டும், 11 லட்சத்து 52 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். லாபத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படுவதாகவும் திரு.பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.