வானில் 70 கிலோ மீட்டர் பறந்து சென்று, வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
Sep 17 2019 7:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வானில் 70 கிலோ மீட்டர் பறந்து சென்று, வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டள்ளது.
வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை 20 முறைக்கும் மேல் சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 8 முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டு உள்ளது. இறுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று, மேற்குவங்க வான் வெளியில், எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.