ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஊழல் மலிந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சம்பவர்கள் நேரிட்டன - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸ் மீது மறைமுக தாக்கு
Sep 17 2019 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது போன்ற செய்திகள் தினந்தோறும் வந்தன என்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா மறைமுகமாக சாடியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, திரு. அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த 2013 ஆம் ஆண்டு, லஞ்ச ஊழல் புகார், எல்லையில் பாதுகாப்பின்மை, ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை போன்ற செய்திகள், தினந்தோறும் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன என்று தெரிவித்தனர்.
மேலும், அந்த ஆண்டு ஆட்சியில் இருந்த மத்திய அமைச்சர்கள், ஒவ்வொருவரும் நாட்டின் பிரதமர் போல் செயல்பட்டனர் என்றும், அப்போது இருந்த பிரதமரை அவர்கள் மதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. இந்த அரசை, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா மறைமுகமாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.