ஜாகிர் நாயக்கை ஒப்படைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுக்கவில்லை : மலேஷிய பிரதமர் மகதிர் பின் முகமது

Sep 17 2019 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை, இந்‌தியாவிடம் ஒப்படைக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுக்‍கவில்லை என்று, மலேஷிய பிரதமர் திரு. மகதிர் பின் முகமது தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத‍ போகர் ஜாகிர் நாயக், இந்தியாவில் இருந்‌து தப்பியோடி, மலேஷியாவில் வசித்து வருகிறார். பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசும் அவருக்கு, பொதுக் கூட்ட‍ங்களில் பேச, மலேஷிய அரசு தடை விதித்துள்ளது. இவர், இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், மலேஷிய பிரதமர் திரு. மகதிர் பின் முகமது அளித்த பேட்டி ஒன்றில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, அவர், ஜாகிர் நாயக்கை ஒப்படைக்கும்படி கேட்கவில்லை என்றும், இவர் இந்தியாவுக்கும் தொந்தரவு கொடுப்பார் என்றும் கூறினார்.

ஜாகிர் நாயக் மலேஷியாவைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறிய அவர், முந்தைய அரசால் அவருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டது என்றும், நிரந்தர குடியுரிமை பெற்றவர், அரசை விமர்சிக்கக் கூடாது என்பதால், அவருக்கு பொதுக்கூட்டங்களில் பிரசாரம் ‍செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00