காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Sep 17 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்‍கை எடுக்‍குமாறு மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி அசாத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தாக்‍கல் செய்த மனுக்‍கள் மீது உச்சநீதிமன்றத்தில் நேற்று சிறப்பு அமர்வு விசாரணை மேற்கொண்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில், தேசிய பாதுகாப்பை கருத்தில் கெண்டு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து குலாம் நபி ஆசாத் தாக்‍கல் செய்த மனுவில், தான் 3 முறை காஷ்மீருக்கு செல்ல முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், எனவே அங்கு செல்ல தன்னை அனுமதிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு, பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் செல்லவும், மக்களை சந்திக்கவும் குலாம்நபி ஆசாத்துக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் அரசியல் கூட்டங்கள், பேரணிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00