தமிழகக் கேரள எல்லையில் பழங்குடி கிராமங்களில் வேகமாகப் பரவும் பொண்ணுக்கு வீங்கி வைரஸ் - கிராமங்கள் தோறும் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை
Sep 17 2019 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள நீலகிரி மாவட்ட பழங்குடியின கிராமங்களில், மாணவர்களை ஒருவகை வைரஸ் நோய் தாக்கி உள்ளது. 'பொன்னுக்கு வீங்கி' என்ற கூறப்படும் இந்த நோய் கண்ட மாணவர்களுக்கு அரசு மருத்துவ குழுவினர் சிசிச்சை அளித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட, தமிழக - கேரள எல்லைப் பகுதியான, பெண்ணை, பாலாபள்ளி போன்ற கிராமங்களில், பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் மாணவர்களை வைரஸ் நோய் தாக்கி உள்ளது. 'பொன்னுக்கு வீங்கி' எனப்படும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், முகத்தின் ஒரு பகுதி வீக்கமடைந்து, உணவு சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.