பதவிக்காலம் முடிந்ததால் ஆளுநர் பதவியில் இருந்து வித்யாசாகர் ராவ் விலகல் : மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார்
Sep 17 2019 9:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிர ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மீண்டும் அவர் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.
தெலங்கானாவை சேர்ந்த வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் இடைக்கால ஆளுநர், மகாராஷ்டிர ஆளுநர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். ஆளுநர் பதவியை ஏற்பதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திராவின் பாஜக தலைவராகவும், பா.ஜ.க சட்டமன்ற தலைவராகவும் இருந்துள்ளார். பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து வித்யாசாகர் ராவ் விலகினார். இதையடுத்து தெலங்கானா பா.ஜ.கவில் மீண்டும் அவர் இணைந்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வித்யாசாகர் ராவ், மீண்டும் பா.ஜ.கவில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்க பாடுபடப்போவதாகவும் கூறியுள்ளார்.