பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவின் உடல்நலம் பாதிப்பு - வீட்டிலேயே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
Sep 17 2019 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவரது வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா மீது, அவரது கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மாணவி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதுடன், சின்மயானந்தாவிற்கு எதிராக வீடியோ ஆதாரங்களையும் சமர்பித்துள்ளார். இதனால் சின்மயானந்தாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சின்மயானந்தாவின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள சின்மயானந்தாவின் இல்லத்தில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.