டெல்லியில் தங்களது கார் மீது மோதிச்சென்ற நபரை தாக்கிய கும்பல் அவரது கடையில் இருந்து 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது
Aug 22 2019 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் உள்ள Punjabi Bagh பகுதியில் நேற்றிரவு சாலையில் சென்ற ஒரு கார் மீது மற்றொரு கார் மோதிச்சென்றது. இதனால் காரில் சென்ற கும்பல் ஆத்திரமடைந்து தங்களது காரை இடித்துச்சென்ற காரை துரத்திச் சென்றது. தொடர்ந்து அந்த காரில் இருந்த நபர் அவரது கடையில் சென்று இறங்கினார். அப்போது கடையில் புகுந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கியதுடன், கடையில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை முன்வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.