2019-2020 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Aug 22 2019 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2019 - 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு நீட் தேர்வு, மே 3ம் தேதி நடைபெறும் என்றும், முடிவுகள் ஜூன் 4-ல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதற்காக, வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்‍கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 14 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர். அதில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00