போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் இனி முதலமைச்சரே ஆனாலும் அபராதம் செலுத்த வேண்டும் - மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்
Aug 22 2019 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் இனி முதலமைச்சரே ஆனாலும் அபராதம் செலுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஒன்றாம் தேதி முதல், மோட்டார் வாகன திருத்தச் சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்றும், மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். போக்குவரத்து சட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் அத்துறை சார்ந்த அதிகாரிகளை கண்காணிக்க, அதிநவீன நுண்ணறிவு போக்குவரத்து கண்காணிப்பு சாதனங்கள் மாநிலங்கள் தோறும் பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் வாகன விபத்துகளில் பலியாவதாகவும், மோட்டார் வாகன திருத்தச் சட்டம், விபத்துகளை குறைக்க உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் இனி அபராதம் செலுத்த வேண்டும் என்று திரு.நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.