நிலவின் முதல் வட்டப்பாதையை இன்று அடைகிறது சந்திரயான் 2 விண்கலம் - திரவ என்ஜினை இயக்க இஸ்ரோ திட்டம்
Aug 20 2019 8:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இன்று சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திரவ என்ஜின் இயக்கப்பட உள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜுலை 22ம் தேதி இஸ்ரோ ஏவியது. ஆகஸ்ட் 14 ம் தேதி அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக சந்திரயான் 2 திசை மாற்றப்பட்டது. நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலத்தை இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சந்திராயனின் திரவ என்ஜின் இன்று இயக்கப்பட உள்ளது. நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் விண்கலம் சென்ற பிறகு, 4 முறை அதன் சுற்றுப்பாதை மாற்றப்படும். இறுதியாக செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கவுள்ளது.