உத்தரப்பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்துள்ளது- மாயாவதி கடும் விமர்சனம்

Aug 19 2019 7:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில், திரு. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து, காட்டு தர்பார் நடப்பதாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

செல்வி மாயாவதி இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், பிரபல ஹிந்தி நாளேடு ஒன்றின் புகைப்பட செய்தியாளரும், அவரது சகோதரரும், உத்தரப்பிரதேசத்தின் Saharnpur மாவட்டத்தில் சுட்டுக்‍ கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பற்றி நேரடியாகக்‍ குறிப்பிடாமல், திரு. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில், Mafia கும்பல், குற்றவாளிகள் மற்றும் குண்டர்களின் ஆதிக்‍கம் நிறைந்த காட்டு தர்பார் நடப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் அனைத்து குற்றச்செயல்களும் உச்சக்‍கட்டத்தை எட்டியிருப்பதாகவும், மக்‍கள் எல்லோரும் பாதுகாபற்ற சூழலில் மிகுந்த அச்சத்தோடு வாழ்வதாகவும், இந்த நிலைமை மிகவும் வருந்தத் தக்‍கது, துரதிருஷ்டவசமானது என்றும் ட்விட்டர் பதிவில் செல்வி மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00