ஜம்முவை அடுத்த தாவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்ட கட்டுமானப் பணியாளர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்
Aug 19 2019 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்முவை அடுத்த தாவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரில் தாவி ஆற்றின் குறுக்கே, புதிய பாலம் ஒன்றின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர், விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.