பூட்டான் மன்னர், பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை : இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
Aug 18 2019 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு.மோடி மற்றும் பூட்டான் பிரதமர் லோடேய் ஷெரீங் முன்னிலையில், இந்தியா-பூட்டான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் திரு. நரேந்திரமோடி, 2 நாள் அரசு முறை பயணமாக, நேற்று பூட்டான் சென்றார். பூட்டானில் உள்ள பாரோ விமான நிலையத்தில், பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் லோடேய் ஷெரீங் வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு மன்னர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.