உபா சட்ட திருத்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு : அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் திருத்தங்கள் உள்ளதாக புகார்
Aug 17 2019 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டவிரோத செயல்தடுப்பு சட்டத்திருத்தத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தனி நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பது உள்ளிட்ட சரத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டுவந்தது. அதன்படி, தனி நபர்களை பயங்கரவாதிகளாக பெயர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் விதமாக திருத்தம் செய்யப்பட்டிருந்தது. கடும் அமளிக்கு இடையே, இது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்நிலையில், சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் சட்டப்பிரிவுகள் பதினான்கு, பத்தொன்பது மற்றும் இருபத்தி ஒன்றில் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் விதமாக இந்த திருத்தம் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.